ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திமுக., தலைவர் கருணாநிதி மறைந்த அன்று, அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத பல திரையுலக பிரபலங்கள், அவர் அடக்கம் செய்யப்பட்ட மெரினாவிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். த்ரிஷா, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று(ஆக., 11) நடிகை ஜெயசித்ரா, நடிகர்கள் தியாகராஜன் மற்றும் அவரது மகன் பிரஷாந்த் ஆகியோரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தியாகராஜன், கருணாநிதியுடன் மூன்று ஆண்டுகள் நான் பயணித்து இருக்கிறேன், அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம் என்றார்.
தொடர்ந்து பேசிய பிரஷாந்த், கருணாநிதியின் பொன்னர் சங்கர் படத்தில் நான் நடித்தேன். அவருடைய படத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். இன்று நம்முடன் அவர் இல்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.