வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' சீசன் 2 நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வந்து பஞ்சாயத்து செய்யும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்தான் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது என்பதுதான் பலருடைய கருத்தாக உள்ளது. கடந்த வாரம் சர்வாதிகாரி டாஸ்க்கில் ஐஸ்வர்யா செயல்பட்ட விதம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. கொஞ்சமும் மரியாதை, மனிதாபிமானம் இல்லாமல் பாலாஜி மீது குப்பைகளைக் கொட்டியது நேயர்கள் பலரிடமும் எதிர்ப்பைப் பெற்றது.
கமல்ஹாசன் அந்த விவகாரத்தை எப்படி கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு சனிக்கிழமை இருந்தது. அதற்கான புரோமோவிலும் கமல்ஹாசன் கோபத்தில் பொங்கி எழுந்திருந்தார். சனி இரவு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அவருடைய கடும் கோபத்தை காட்டப் போகிறார் என்று எதிர்பார்த்தால் அது பேச்சில் மட்டும்தான் இருந்ததே தவிர செய்கையில் இல்லை.
போட்டியாளர்களிடம் அது பற்றி பேசும் போது கோபத்தில் அணிந்திருந்த கோட்டைக் கழற்றி தரையில் போட்டு, சட்டை கைகளை மடித்து சண்டையில் இறங்குவது போல நடித்தார். ஆனால், அந்த செய்கை கூட ஹிந்தி பிக் பாஸில் சல்மான்கான் ஏற்கெனவே செய்ததுதான் என உடனேயே மீம்ஸ்கள் மூலம் அள்ளித் தெளித்து விட்டார்கள். ஐஸ்வர்யா, பாலாஜி இருவருக்கும் அட்வைஸ் மட்டும் செய்துவிட்டு, இருவரையும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்க வைத்து சமாதானக் கொடியை மட்டும் பறக்க வைத்தார். இருவரையுமே அவர் பெரிதாகக் கண்டிக்கவில்லை. ஐஸ்வர்யா செய்த சர்வாதிகாரத் தவறை அவர் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்றே நேயர்களும் கருதினார்கள்.
மேலும், தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 2 வின் படத் தொகுப்பு சரியாக இல்லை என்பது பலரின் குற்றச்சாட்டாக உள்ளது. முதல் சீசனில் காலை 8 மணி முதல் இரவு 10, 11 மணி வரையிலான தொகுப்பைத்தான் காட்டுவார்கள். இந்த சீசனில் அந்த நேரம் கூட கடைபிடிக்கப்படுவதில்லை. இரண்டு நாள் சம்பவங்களைச் சேர்த்து காட்டுகிறார்கள். அதிலும் ஞாயிறு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் 10 நிமிடங்களிலேயே ஒரு நாள் நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
50 நாள் ஆகியும் எந்த 'வைல்ட் கார்டு' நுழைவும் நடக்கவில்லை. அவர்கள் எதிர்பார்க்கும் பிரபலங்கள் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. மீதமுள்ள 50 நாளாவது சுவாரசியமாக இருக்குமா என்பது 'வைல்ட் கார்டு' வந்தால் மட்டுமே தெரியும்.