ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படத்தின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தனது தந்தை என்.டி.ஆரின் வேடத்தில் பாலகிருஷ்ணா நடித்து வரும் இந்த படத்தில் அவரது தாயார் பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். இவர்களுடன் ராணா, காஜல்அகர்வால், கீர்த்தி சுரேஷ் உள்பட பல பிரபலங்களும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை ஐதராபாத்தில் போடப்பட்ட செட்டில் படமாக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்தபடியாக என்.டி.ஆரின் சொந்த ஊரான நிம்மகுரு மற்றும் அவர் மனைவி பசவதாரகத்தின் சொந்த ஊரான ஆந்திராவிலுள்ள கோமரவொலும் ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. கதையில் நம்பகத் தன்மையை கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே பெற்றோரின் சொந்த கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தயிருப்பதாக தெரிவித்துள்ளார் பாலகிருஷ்ணா.