ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
'கபாலி' படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித், ரஜினிகாந்த் கூட்டணி மீண்டும் இணைந்த படம் 'காலா'. மும்பையில் வாழும் தமிழர்களைப் பற்றிய கதையாக இந்தப் படம் அமைந்தது. விமர்சன ரீதியாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட படமாக இருந்த 'காலா' படம் பெரிய அளவில் வெற்றி பெற்று, வசூல் பெறவில்லை என திரையுலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், படத் தயாரிப்பு நிறுவனம் படம் பெரிய வெற்றி பெற்றது என்று அறிவித்தது. இருந்தாலும் வசூல் விவரங்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
ஜுன் 7ம் தேதி வெளியான 'காலா' படம் இன்று 50வது நாளைத் தொட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் ஒரு படம் 50வது நாளைக் கடப்பதே பெரிய விஷயமாக உள்ளது. ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம்தான் ஒவ்வொரு படங்களும் தாக்குப் பிடிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு விஷால் நடித்த 'இரும்புத் திரை' படம் 75வது நாளைக் கடந்தது. அதற்கடுத்து 'காலா' படம் 50 நாளைத் தொட்டுள்ளது. 'காலா' படம் வெற்றியா, வசூலா என்பதை படம் வெளியான சில நாட்களுக்குப் பிறகே யாரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி 'காலா' படம் மூலம் சுமார் 50 சதவீதம் நஷ்டம் என்றுதான் சொல்கிறார். ஆனால், படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு பல்வேறு உரிமைகளை விற்ற விதத்தில் லாபம் கிடைத்துள்ளது. அந்த லாபம் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் கிடைக்கவில்லை என்றுதான் கோலிவுட்டில் பேச்சாக உள்ளது.