டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'மூடர்கூடம்' படத்தை இயக்கிய நவீன், அந்தப்படம் கமர்ஷியலாக வெற்றியடைந்த பிறகும் அடுத்தப்படத்தை இயக்கவில்லை. சில வருட இடைவெளிக்குப் பிறகு சமுத்திரக்கனியை வைத்து கொளஞ்சி என்ற படத்தை தயாரித்தார். அந்தப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் திமிரு பிடிச்சவன் படத்தை அடுத்து விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் நவீன். இதற்கிடையில் 'கயல்' ஆனந்தி முக்கிய கேரக்டரில் நடிக்க, சத்தமில்லாமல் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதுவரை படத்துக்கு பெயர் சூட்டப்படாமலே படப்பிடிப்பு நடத்தி வந்தார்.
தற்போது இந்த படத்திற்கு 'அலாவுதீனின் அற்புதகேமரா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். 'கயல்' ஆனந்தி தவிர இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் அனைவரும் புதுமுகங்கள்.
கொளஞ்சியை வெளியிட்ட சில வாரங்களில் இந்தப்படத்தையும் வெளியிட இருக்கிறார்கள். அதன் பிறகே விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.