பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மலையாளத்தில் இருந்து புதுப்புது கதாநாயகிகளாக உருவாக்கி தமிழுக்கு அனுப்பிவைத்து விட்டு, தமிழில் நன்றாக நடிக்கும் கதாநாயகர்களை மலையாள படங்களில் நடிக்க வைப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த வருடம் நடிகர் விஷால் கூட வில்லன் என்கிற மலையாள படத்தில் நடித்தது அப்படித்தான். அதை தொடர்ந்து நடிகர் ஜெய்யும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. அதிலும் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் ராஜா-2 என்கிற படத்தில் மம்முட்டிக்கு தம்பியாக நடிக்க இருக்கிறார் ஜெய்.
இந்தப்படத்தின் முதல் பாகமான போக்கிரி ராஜாவில், மம்முட்டியின் தம்பியாக நடித்தவர் பிருத்விராஜ். ஆனால் இரண்டாம் பாகத்தில் பிருத்விராஜ் நடிப்பது சந்தேகம் என்று ஏற்கனவே சொல்லப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஜெய் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலிமுருகன் வெற்றிப்படத்தை இயக்கிய வைஷாக்கும், அந்த படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணாவும், மீண்டும் இந்த ராஜா-2 வில் இணைகிறார்கள் என்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.