பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் அரங்கம் ஒன்றில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக "மறக்க முடியுமா தூத்துக்குடியை" என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. இதில் சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை விமர்சித்து பல முக்கிய பிரமுகர்கள் பேசினார்கள். இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது:
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு மனிதாபிமானமற்ற செயல். அங்கு நடந்தவற்றையும், நடந்து கொண்டிருப்பவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாட்டு மக்களை எப்போதும் அச்சத்தில் வைத்திருப்பதையே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். அப்படி பயமுறுத்துகிறவர்களின் முடிவும் மோசமாக இருக்கும்.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் போன்று மாறி வருகிறது. அனைத்துக் கட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகிறது. மக்கள் இவர்களை வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். என்னை போன்றவர்கள் கேள்வி கேட்பது மக்களுக்காக. கேள்வி கேட்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. ஆனால் கேள்வி கேட்டால் நம் கையை எடுத்தே நம் கண்ணை குத்துகிறார்கள். என்றார் பிரகாஷ்ராஜ்.
தமிழக அரசை விமர்சித்து பிரகாஷ்ராஜ் பேசியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸ் அனுமதி இன்றி நிகழ்ச்சி நடத்த இடம் கொடுத்ததாக தனியார் அரங்க உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.