கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் அரங்கம் ஒன்றில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக "மறக்க முடியுமா தூத்துக்குடியை" என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. இதில் சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை விமர்சித்து பல முக்கிய பிரமுகர்கள் பேசினார்கள். இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது:
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு மனிதாபிமானமற்ற செயல். அங்கு நடந்தவற்றையும், நடந்து கொண்டிருப்பவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாட்டு மக்களை எப்போதும் அச்சத்தில் வைத்திருப்பதையே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். அப்படி பயமுறுத்துகிறவர்களின் முடிவும் மோசமாக இருக்கும்.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் போன்று மாறி வருகிறது. அனைத்துக் கட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகிறது. மக்கள் இவர்களை வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். என்னை போன்றவர்கள் கேள்வி கேட்பது மக்களுக்காக. கேள்வி கேட்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. ஆனால் கேள்வி கேட்டால் நம் கையை எடுத்தே நம் கண்ணை குத்துகிறார்கள். என்றார் பிரகாஷ்ராஜ்.
தமிழக அரசை விமர்சித்து பிரகாஷ்ராஜ் பேசியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸ் அனுமதி இன்றி நிகழ்ச்சி நடத்த இடம் கொடுத்ததாக தனியார் அரங்க உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.