வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகர் கமல்ஹாசன், டுவிட்டரில் கேள்விக்கு பதிலளிப்பதாக காலையில் தனது டுவிட்டரில் பதிவிட்டார். மாலையில் இதற்கான நிகழ்வு நடந்தது. வெறுமென பெயரளவில் தான் இந்த கேள்விகள் கேட்கப்பட்டன. "வணக்கம் டுவிட்டர்" தொடர்பாக நடந்த நிகழ்ச்சிக்கு தான் இந்த விளம்பரம்.
இந்த நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றார். தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மூலமாக கமலிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. டிடி கேட்ட கேள்விகள் பெரும்பாலும், அவர் ஏற்கனவே தயார் செய்து வந்த கேள்விகளாகத் தான் இருந்தன. கடைசியாக ஒன்றிரண்டு மட்டுமே ரசிகர்கள் கேள்விகளாக இருந்தன.
அந்தவகையில் கமலிடம் உங்களுக்கு எப்படி டுவிட்டர் ஆர்வம் ஏற்பட்டது என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல்,
மருது சகோதரர்களுக்கு சுவர் கிடைத்தது போன்று எனக்கு டுவிட்டர் கிடைத்தது. அவர்கள் அரசியலுக்கு சுவரை பயன்படுத்தினார்கள். நான் டுவிட்டரை பயன்படுத்துகிறேன். என்னுடைய நோட்டீஸ் போர்டாக டுவிட்டர் உள்ளது. பொதுபோக்குக்காக அல்ல. தனிப்பட்ட கோபம், மக்களுக்கு ஏற்படும் அநீதிகளை இதன் வாயிலாக பதிவு செய்கிறேன்.
மேலும் சிலர் அவமானம் செய்யும் விதத்தில் கேள்வி கேட்பார்கள். அவர்கள் எல்லாம் வெறுமென கேள்வி மட்டுமே கேட்பவர்கள். ஆகவே, அதை அப்படியே ஒதுக்கிவிட்டு போய்விடலாம். டுவிட்டரில் சுதந்திரமாக கருத்துக்களை பதிவு செய்யலாம், அதில் கொஞ்சம் பொறுப்பும் வேண்டும். அதை சிறப்பாக கையாள வேண்டும். என் அப்பா ஊழலுக்கு எதிரானவர். என்னையும் அப்படித்தான் வளர்த்தார். அதுபோல் என் கட்சியில் உள்ளவர்களும் அப்படித்தான் இருப்பார்கள்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.