டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சென்னை 28, சத்தம் போடாதே, தோழா, ராமன் தேடிய சீதை, பிரியாணி உள்பட பல படங்களில் நடித்தவர் நிதின் சத்யா. தற்போது தயாரிப்பாளராகி தனது நண்பர் பத்ரி கஸ்தூரியுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ஜருகண்டி. இதில் ஜெய் ஹீரோ. ரெபோ மோனிகா என்ற புதுமுகம் ஹீரோயின்.
வெங்கட் பிரபுவின் உதவியாளர் பிச்சுமணி இயக்கி உள்ளார். போபோ சசி இசை அமைத்துள்ளார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. படம் பற்றி இயக்குனர் பிச்சுமணி கூறியதாவது:
பலர் படத்துக்கு தெலுங்கில் தலைப்பு வைத்திருப்பதாக கூறுகிறார்கள். தலைப்பு தெலுங்கு வார்த்தை தான் ஆனால் அது வைக்கப்பட்டிருக்கும் நோக்கம் வேறு. திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு சென்றால் மக்கள் கூட்டத்தை சமாளிக்க வேகமா செல்லுங்கள் என்று தெலுங்கில் கூறுவார்கள். அந்த வார்த்தைதான் ஜருகண்டி. படமும் அப்படி வேகமாக செல்வதால் அந்த தலைப்பு வைத்திருக்கிறோம். அதோடு இந்தியா முழுக்க தெரிந்த ஒரு வார்த்தை அது.
மற்றபடி படம் ஆக்ஷ்ன் த்ரில்லர். பல ஆயிரம் கோடி வங்கியில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுகிறவர்கள் ஒரு பக்கம், சில ஆயிரம் கடன் வாங்கியவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது ஒரு பக்கம், சிலருக்கு கடனே மறுக்கப்படுவது ஒரு பக்கம். ஏன் இந்த முரண்பாடுகள் என்பதுதான் கதையில் மைய இழை. பொழுதுபோக்கு அம்சங்களுடன் இன்றைய காலத்துக்கு தேவையான ஒரு நல்ல மெசேஜுடன் படத்தை உருவாக்கி இருக்கிறோம். என்கிறார் பிச்சுமணி.