பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
கர்நாடகாவில் 'காலா' படம் வெளியாக தகுந்த சூழல் இல்லை என கர்நாடகா முதல்வர் குமாரசாமி நேற்று தெரிவித்திருந்தார். கர்நாடகா உயர்நீதிமன்றம் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட பின்பும் அவர் இப்படி பேசியிருப்பது 'காலா' குழுவினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா முதல்வர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்த போது 'காலா' விவகாரம் குறித்து பேசவில்லை, காவிரி விவகாரம் குறித்துதான் பேசினோம் என்றார். கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்கள். நடிகர் பிரகாஷ்ராஜ், கமல்ஹாசன் 'காலா' குறித்தும் குமாரசாமியிடம் பேசியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம்' படத்திற்கு தமிழக அரசு தடை விதித்த போது, நாட்டை விட்டே வெளியேறுவேன் என வீராவேசமாகப் பேசியவர் கமல்ஹாசன். அப்போது அவருக்கு உடனடியாக ஆதரவு தெரிவித்தவர் ரஜினிகாந்த். இப்போது ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படத்திற்கு கர்நாடகாவில் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கர்நாடகா முதல்வர் குமாரசாமியை சந்தித்த நிலையில், 'காலா' பற்றி கமல்ஹாசன் பேசாமல் தவிர்த்தது புதிய சர்ச்சையாகி உள்ளது.
பிரச்சினைகளைக் கடந்து 'காலா' அங்கு வெளியாகி வெற்றி பெறும் என கமல்ஹாசன் பொதுவாகச் சொல்லிவிட்டு அந்த பிரச்சினை குறித்து தொடர்ந்து எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் தனித் தனி அரசியல் பாதையில் செல்வதால் அவர்கள் சார்ந்த பிரச்சினைகளுக்குக் கூட இருவரும் சேர்ந்து போராட மாட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது ?.