‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
காவிரி விவகாரத்தில் ரஜினி கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் காலா படத்தை திரையிட தடை விதித்திருக்கிறது கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை. இதுப்பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ்,
மனிதனுக்கும் ஆற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் தான் காவிரி விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிடுகிறோம். இந்த விவகாரத்தில் இருமாநில மக்களின் உணர்வுகளும் இப்படித்தான் இருக்கும். இருமாநில அரசுகளும், சட்ட வல்லுநர்களும் இணைந்து நமது விவசாய பிரச்னைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தச்சூழலில் காலா படத்தை திரையிடாமல் தடுப்பதால் நாம் என்ன செய்ய போகிறோம். ரஜினி கூறிய கருத்து நம்மை பாதித்துள்ளது உண்மைதான், ஒப்புக்கொள்கிறேன். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று சில அமைப்புகள் கூறி வருகின்றன. இதுதான் கன்னட மக்களான நாம் வேண்டுவதா?
ஒருவேளை படம் வெளியாகி அதை மக்கள் புறக்கணித்தால் அப்போ தெரியும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று. ஆனால், மக்கள் சார்பாக இதுபோன்ற சமூகவிரோதிகள் தீர்மானிக்கிறார்கள் நமக்கு எதுவும் தெரிந்துவிடக் கூடாதென்று.
மக்களுக்கு இது வேண்டும்; இது வேண்டாம் என முடிவு செய்ய இவர்கள் யார்? நடிகர் கூறிய கருத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லாத தயாரிப்பாளரின் முதலீடு என்னாவது? படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களில் இருந்து விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள், போஸ்டர் ஒட்டும் நபர் என திரைப்படம், மற்றும் அதை சார்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை பற்றியும் சந்திக்க வேண்டும்.
வாகனங்கள் எரிப்பு, பொருள்களை சேதப்படுத்துவது என வன்முறைகள் நீண்டால் இருமாநில மக்களிடையேயான நல்லிணக்கம் குலைந்துபோகும். நமது உணர்ச்சிகளைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்ட பின்னர், இந்தச் சமூக விரோதிகள் எங்கு செல்வார்கள்? இறுதியில் நாமே காயமடைந்து, அந்த காயத்துடன் வாழ வேண்டியிருக்கும்.
இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.