ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்காமல் போக மாட்டேன்' என்ற முடிவெடுத்துள்ளார் போலிருக்கிறது, ரெஜினா. அழுத்தமான கதையம்சம் உள்ள படங்களாக இருந்தாலும் சரி, கவர்ச்சி வேடமாக இருந்தாலும் சரி; உடனடியாக நடிக்க சம்மதித்து விடுகிறார்.
அடுத்ததாக, அவரது நடிப்பில் வெளிவர தயாராக உள்ளது, மிஸ்டர் சந்திரமவுலி. ரெஜினா, சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் என்றாலும், இதுவரை, தான் நடித்த படங்களில் சொந்த குரலில் பேசியது இல்லை. அவருக்கு இருந்த இந்த ஏக்கம், மிஸ்டர் சந்திரமவுலி மூலம் தீர்ந்து விட்டது.
இந்த படத்துக்காக, முதல் முறையாக சொந்த குரலில் பேசியுள்ளதை பரவசத்துடன் கூறி வருகிறார், ரெஜினா. தெலுங்கு படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த அவரது பார்வை, சமீபகாலமாக, தமிழ் படங்கள் மீது திரும்பியுள்ளது. கோலிவுட், அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.