ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கர்நாடகா மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் விமர்சகர் ஆகவும் மாறியிருப்பவர் பிரகாஷ்ராஜ். எந்தக் கட்சியைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். தேர்தல் முடிந்ததும் கர்நாடகாவில் பாஜக முதல்வர் பதவியேற்றதும், பிரகாஷ்ராஜ் அவ்வளவுதான் என பலரும் அவருக்காக சோக கீதம் பாட ஆரம்பித்தார்கள். நல்லவேளையாக பாஜக ஆட்சியிலிருந்து சில நாட்களில் விலகியது. தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அரசை அமைத்துள்ளன.
ஆனால், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மட்டுமே பதவியேற்றுள்ளனர். அமைச்சர்கள் யார் யார், அவர்களது இலாக்காக்கள் என்ன என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அது தொடர்பாக காங்கிரஜ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இடையே குழப்பம் நீடித்து வருகிறது. இது குறித்து கர்நாடகாவின் புதிய அரசியல் விமர்சகர் ஆன நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டலடித்துள்ளார்.
“கர்நாடகா, அன்புள்ள ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ், ஒரு வாரம் ஆகிவிட்டது. உங்கள் அமைச்சரவை மற்றும் இலாக்காக்கள் பற்றி சீக்கிரம் முடிவு செய்யுங்கள். மக்களாகிய நாங்கள் அரசாங்கத்தைப் பார்க்க வேண்டும், ஆட்சி செய்ய ஆரம்பியுங்கள்,” எனக் கிண்டலடித்திருக்கிறார்.