கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
கர்நாடகா மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் விமர்சகர் ஆகவும் மாறியிருப்பவர் பிரகாஷ்ராஜ். எந்தக் கட்சியைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். தேர்தல் முடிந்ததும் கர்நாடகாவில் பாஜக முதல்வர் பதவியேற்றதும், பிரகாஷ்ராஜ் அவ்வளவுதான் என பலரும் அவருக்காக சோக கீதம் பாட ஆரம்பித்தார்கள். நல்லவேளையாக பாஜக ஆட்சியிலிருந்து சில நாட்களில் விலகியது. தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அரசை அமைத்துள்ளன.
ஆனால், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மட்டுமே பதவியேற்றுள்ளனர். அமைச்சர்கள் யார் யார், அவர்களது இலாக்காக்கள் என்ன என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அது தொடர்பாக காங்கிரஜ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இடையே குழப்பம் நீடித்து வருகிறது. இது குறித்து கர்நாடகாவின் புதிய அரசியல் விமர்சகர் ஆன நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டலடித்துள்ளார்.
“கர்நாடகா, அன்புள்ள ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ், ஒரு வாரம் ஆகிவிட்டது. உங்கள் அமைச்சரவை மற்றும் இலாக்காக்கள் பற்றி சீக்கிரம் முடிவு செய்யுங்கள். மக்களாகிய நாங்கள் அரசாங்கத்தைப் பார்க்க வேண்டும், ஆட்சி செய்ய ஆரம்பியுங்கள்,” எனக் கிண்டலடித்திருக்கிறார்.