பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஷால், சமந்தா, அர்ஜுன் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த 'இரும்புத்திரை' படம் விஷால் நடித்து வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலைக் குவித்துள்ள படமாகவும், பெரிய வெற்றியைப் பெற்ற படமாகவும் அமைந்துள்ளது. இது பற்றிய தகவலை விஷாலே இப்படத்தின் தெலுங்குப் பதிப்பான 'அபிமன்யுடு' பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், 'இரும்புத்திரை' படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கும் எண்ணம் உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.
“இரும்புத்திரை' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என படம் வெளிவருதவற்கு முன்பே யோசித்துவிட்டோம். இன்னும் அதற்கான கதையை இயக்குனர் மித்ரன் எழுத வேண்டும். டெக்னாலஜி நமக்கு எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி மித்ரனிடம் பல விஷயங்கள் இருக்கின்றன. 'இரும்புத்திரை' படத்தில் அதை அவர் 20 சதவீதம் தான் தெரிவித்திருக்கிறார். இந்தக் காலத்திற்குத் தேவையான ஒரு படம் 'இரும்புத்திரை' என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
இரும்புத்திரை படத்தின் தெலுங்குப் பதிப்பான 'அபிமன்யுடு' வரும் ஜுன் 1ம் தேதி வெளியாகிறது.