டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமுத்திரகனி இயக்கிய தமிழ் படம் நிமிர்ந்து நில். இது ஜண்டா பாய் கப்பி ராஜு என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரானது. தமிழில் ஜெயம்ரவி நடித்த கேரக்டரில் தெலுங்கில் நானி நடித்தார். மற்ற கேரக்டர்கள் அப்படியே நடித்தார்கள். சரத்குமார், அமலா பால், ராகினி திரிவேதி, நாசர், சுப்பு பஞ்சு, பார்வதி நாயர் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
இப்போது இந்தப் படத்தை தமிழில், வேலன் எட்டுத்திக்கும் என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். நாகன் பிக்சர்ஸ் சார்பில் கே.நாகன் வெளியிடுகிறார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தமிழில் ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடித்திருந்ததைப்போல தெலுங்கில் நானி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இரண்டு படத்திலும் சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.