இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில், நேற்று நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தின்போது 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தனது இணைய பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதை தடுக்க முடியாது. தங்கள் உரிமைக்காக அமைதிப் பேரணி சென்ற மக்களை தடியடி நடத்தி, சுட்டுக்கொல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான எம்மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும். வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்.
இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.