தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். அதைத் தக்க வைக்க சிலர் தவறி விடுகின்றனர். அப்படி ஒரு நிலைமையில்தான் சந்தானம் இருக்கிறார். டிவியில் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியை நடத்தி ரசிகர்களைக் கவர்ந்தவர் சினிமாவிற்குள்ளும் நுழைந்து நகைச்சுவை நடிகராக பலத்த வரவேற்பைப் பெற்றார். ஆனால், அவருடனேயே டிவியில் பயணித்த சிவகார்த்திகேயன் ஹீரோவாக வெற்றி பெற்றதும் சந்தானத்திற்கும் அந்த ஆசை வந்தது. நகைச்சுவை நடிகராக நடிப்பதை விட்டுவிட்டு நாயகனாக நடிக்க ஆசைப்பட்டார்.
இதுவரை அவர் நாயகனாக நடித்த படங்களில் 'தில்லுக்கு துட்டு' படம் மட்டும்தான் ஓடியது. எப்போதே எடுத்து முடிக்கப்பட்ட 'சர்வர் சுந்தரம்' பல வெளியீட்டுத் தேதிகளை அறிவித்து, பிறகு தள்ளிப் போய் கடைசியாக இப்போது ஜுலை 6ம் தேதியன்று வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். அன்றாவது படம் வருமா, அல்லது தள்ளிப் போகுமா என்பது அப்போதுதான் தெரியும்.
இதனிடையே, சந்தானம் நாயகனாக நடிக்க ஆரம்பித்த 'ஓடி ஓடி உழைக்கணும்' படமும் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் இப்படம் 2016ம் ஆண்டில் ஆரம்பமானது. சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு பின்னர் அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டது.
சந்தானம் நடித்து கடைசியாக வெளிவந்த 'சக்க போடு போடு ராஜா' படம் தோல்வியடைந்த்தால் சந்தானத்திற்கு இருக்கும் வியாபாரமும் போய்விட்டது. தற்போது எந்த புதிய படங்களிலும் நடிக்காமல் வீட்டிலேயே கிடக்கிறாராம். மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிக்க வந்தால் வருமானமும் வரும், பழைய பெயரும் வரும், ஆனால் அவர் வருவாரா ? என கோலிவுட்டிலேயே கேட்டு அவரை அணுகாமல் இருக்கிறார்களாம்.