பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை அமலாபால் இப்போது சுதந்திர பறவை, படங்களில் நடிக்கிறார், வெளிநாடு பறக்கிறார், நடனம் ஆடுகிறார், சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறார். யோகாவும் செய்கிறார். சமீபத்தில் சிரசாசன பயிற்சி எடுத்த அவர்... அதை தனது டுவிட்டரில் வீடியோவாக வெளியிட்டு. "நீங்களும் சிரசாசனம் பண்ணுங்க உடம்புக்கு ரொம்ப நல்லது" என்று அட்வைஸ் செய்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
கஷ்டமான வேலைகளை செய்யும்போது தலைகீழாக நின்றாலும் நடக்காது என்று சொல்ல கேட்டு இருக்கிறோம். தலைகீழாக நிற்பது உடலுக்கு எவ்வளவு முக்கியமானது, பயன் அளிக்க கூடியது என்பதை இப்போது உணர்ந்து இருக்கிறேன். யோகாவில் தலைகீழாக நிற்கும் சிரசாசனம் மிகவும் கஷ்டமானது. எல்லோராலும் எளிதாக அதை செய்ய முடியாது. கடும் பயிற்சிகள் மூலம் மட்டுமே செய்ய முடியும். இந்த ஆசனத்தை நான் ரொம்ப நாட்களாக கற்றேன்.
இதற்காக பயிற்சியாளர் வைத்து இருந்தேன். முதலில் சுவரை தாங்கலாக வைத்து தலைகீழாக நின்றேன். நான் செல்லும் இடமெல்லாம் யோகா பயிற்சி செய்யும் பாயையும் எடுத்துச் சென்றேன். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் தலைகீழாக நின்று பயிற்சி எடுத்தேன். இப்போது எனக்கு யாருடைய உதவியும் இல்லாமல் தலைகீழாக நின்று சிரசாசனம் போட முடிகிறது. இந்த ஆசனம் உடம்பை வலுவாக்கும். எல்லோரும் அவசியம் இதை செய்ய வேண்டும். இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.