தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மன்னர் வகையறா படத்தை அடுத்து, 'கன்னிராசி', 'களவாணி-2' உட்பட அரைடஜன் படங்களில் நடித்து வருகிறார் விமல். இவற்றில் 'கன்னிராசி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விரைவில் இப்படம் வெளியாகிறது.
'களவாணி-2' படத்தின் படப்பிடிப்பு மே 3-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்த படங்களைத் தொடர்ந்து எழில், சுராஜ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார் விமல். இதில் சுராஜ் இயக்கும் படத்தில் விமலுடன் வடிவேலுவும் இணைந்து நடிக்க இருக்கிறார்.
முழுநீள காமெடி படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் விமலும், வடிவேலுவும் போலீஸ்காரர்களாக நடிக்க இருக்கிறார்கள். அதாவது சுராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த மருதமலை படத்தில் வடிவேலு போலீஸ் ஏட்டாக நடித்தார். அர்ஜூன் கான்ஸ்டபிளாக நடித்தார்.
தற்போது விமல் நடிக்க உள்ள படத்தில் இந்த காமெடி டிராக்கையே முழுநீளப்படமாக எடுக்கும் திட்டத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறாராம் சுராஜ். இதனால் படத்துக்கு மருதமலை-2 என்று பெயர் சூட்டலாமா என்றும் யோசித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது.