பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தலைநகரம், படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன், சகலகலாவல்லவன், கத்திச் சண்டை படங்களை இயக்கியவர் சுராஜ். இதில் இவர் இயக்கிய மருதமலை படத்தின் காமெடி கோல்டன் காமெடியாக அமைந்தது.
வடிவேலுவும், அர்ஜூனும் போலீசாக நடித்த காமெடி அது. இப்போது இந்த போலீஸ் காமெடியை டெவலப் பண்ணி அடுத்த படம் இயக்குகிறார் சுராஜ். இதில் வடிவேலு, விமல் காமினேஷன். திரைக்கதை அமைக்கும் பணி முடிந்திருக்கிறது விரைவில் முறைப்படி அறிவிக்க இருக்கிறார்கள்.
'மன்னர் வகையறா' படத்திற்கு பிறகு தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் விமலை அணுகி கதை சொல்லி வருகின்றனர். இந்த வருடத்தில் விமல் நடிப்பில் அரை டஜன் படங்களுக்கு மேல் வெளிவர இருக்கின்றன. இயக்குனர் எழில் டைரக்சனில் மீண்டும் நடிக்கிறார்.
இதுதவிர வெற்றிவேல் இயக்குனர் வசந்தமணி, தமிழன் பட இயக்குனர் மஜித், ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார் விமல். 'மன்னர் வகையறா' வை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் 'கன்னிராசி' படம் இறுதிக்கட்ட பணிகளில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சற்குணம் டைரக்சனில் 'களவாணி-2' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.