ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முதியவர்களை மையமாக வைத்து ஓடி விளையாடு தாத்தா, சந்தியாராகம், தலைமுறை என பல படங்கள் வெளிவந்திருக்கிறது. முதன் முறையாக முதியவர்களை மையமாக வைத்து ஒரு ஆக்ஷ்ன் த்ரில்லர் படம் தயாராகி வருகிறது. படத்தின் தலைப்பு நரை.
இதில் சங்கிலி முருகன், ஜூனியர் பாலையா, நளினிகாந்த், சந்தான பாரதி, மகாநதி சங்கர், ஞானவேல், விஜய் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட 60 வயதை தாண்டிய சீனியர் நடிகர்கள் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் ரோஹித், லீமா, ஈதன் என்ற இளம் வயது நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள். சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் விஜய் இசை அமைக்கிறர், டாக்டர் ஹேமா சரவணன் தயாரிக்கிறார், விவி இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இப்போதெல்லாம் முதியோர் இல்லங்கள் பெருகி விட்டது. பெற்றோர்களை முதியவர்கள் இல்லத்தில் தனித்து விடுவதை குற்ற உணர்ச்சியின்றி செய்கிறார்கள். அப்படி விடப்பட்ட 7 முதியவர்கள் ஒரு இல்லத்தில் நண்பர்களாக வாழ்கிறார்கள். திடீரென ஒரு சம்பவம் அவர்கள் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. பெரும் சிக்கலில் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. படப்பிடிப்பு முடிந்து விட்டது. விரைவில் திரைக்கு வருகிறது. என்றார்.