'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்கள் சார்ந்த மொழியிலிருந்து அடுத்த மொழியிலும் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஒரு ஆசையுடன் 'ஸ்பைடர்' படம் மூலம் நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தமிழில் அறிமுகமானார்.
ஆனால், அந்தப் படம் தெலுங்குப் படமாகவும் அமையாமல், தமிழ்ப் படமாகவும் அமையாமல் போய்விட்டது என மகேஷ் பாபுவே சமீபத்தில் வருத்தப்பட்டுத் தெரிவித்துள்ளார். படத்தை இரண்டு மொழிகளில் தயாரித்ததுதான் தவறு என்று சொல்லியிருக்கிறார்.
'ஸ்பைடர்' தோல்விக்குப் பிறகு மகேஷ் பாபு நடித்து நேற்று வெளிவந்த 'பாரத் அனி நேனு' படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் நன்றாகவே பூர்த்தி செய்துவிட்டது என டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரபரப்பான அரசியல் கதையாக இருக்கும் இந்தப் படம் 'ஸ்பைடர்' தோல்வி வலையிலிருந்து மகேஷ் பாபுவை மீட்டுக் கொண்டுவந்துவிட்டது என்கிறார்கள். கடந்த மாதம் வெளிவந்த ராம்சரண் படமான 'ரங்கஸ்தலம்' படத்தை விடவும் இந்தப் படம் அதிகமான வசூலைக் குவிக்கும் என்றும், நேற்று முதல் நாளிலேயே அதைப் புரிந்துவிட்டது என்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.