ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்துள்ள பேட்டியில், காவிரி நீரில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகி விடும்.
காவிரி நீரை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள்; இப்போது அரசியல்வாதிகள் அதில் தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஒரு நதி நீரை குடித்து வாழ்ந்து, விவசாயம் செய்த மக்கள் சண்டையிட்டு கொள்வது சரியல்ல.
காவிரியை மீட்போம் என தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றும் நிலை தொடரக்கூடாது. காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்களுக்கு எதிராக அரசியல்வாதிகள் துரும்பைக் கூட கிள்ளிப் போடுவதில்லை. அரசியல்வாதிகளின் சுயநலமே இத்தனை ஆண்டுகளாக காவிரி பிரச்சினை தீராததற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.