கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்துள்ள பேட்டியில், காவிரி நீரில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகி விடும்.
காவிரி நீரை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள்; இப்போது அரசியல்வாதிகள் அதில் தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஒரு நதி நீரை குடித்து வாழ்ந்து, விவசாயம் செய்த மக்கள் சண்டையிட்டு கொள்வது சரியல்ல.
காவிரியை மீட்போம் என தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றும் நிலை தொடரக்கூடாது. காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்களுக்கு எதிராக அரசியல்வாதிகள் துரும்பைக் கூட கிள்ளிப் போடுவதில்லை. அரசியல்வாதிகளின் சுயநலமே இத்தனை ஆண்டுகளாக காவிரி பிரச்சினை தீராததற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.