தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளார்கள். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் எப்போது முடிவடையும் என்பது பற்றி திரையுலகத்தில் உள்ள பலருக்கு தெரியாமல் இருக்கிறது.
ஒரு பக்கம் தயாரிப்பாளர் சங்கம் புதுப் புது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுப்பதாகச் சொல்கிறார். நேற்று கூட சங்கத் தலைவர் விஷால் அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், அது பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.
இதனிடையே, மௌனப் படமாக எடுக்கப்பட்டுள்ள 'மெர்க்குரி' படம் நாளை தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில், வெளிநாடுகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை முதலில் தமிழ்நாட்டிலும் வெளியிடப் போவவதாக படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு மற்ற தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். நாளை இப்படத்தை மற்ற இடங்களில் வெளியிடுகிறார்.
இது மௌனப் படம் என்பதால் படத்தை வேறு மாநிலங்களில் வெளியிட்டாலும் தமிழ்நாட்டில் வெளியிட வரும் போது வரவேற்பைப் பெறுவது கடினம். அதற்குள் படத்தின் பைரசி வெளிவந்துவிட்டால், தமிழ்நாட்டு வியாபாரமும் பாதிக்கும், வசூலும் பாதிக்கும்.