கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
மேடை நாகரிகம் என்று சொல்வார்கள். ஆயிரக்கணக்கான பேர் கூடியிருக்கும் மேடையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பெருந்தன்மையானவர்களுக்கு மட்டுமே வரும். சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் பிரகாஷ்ராஜ் பாதியில் மேடையை விட்டு ஓடிப் போனதுதான் தெலுங்குத் திரையுலகத்தின் தற்போதைய பரபரப்பு.
சமீப காலமாக பல சர்ச்சைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பிரகாஷ்ராஜின் புதிய சர்ச்சை இது. மகேஷ் பாபு நடித்து விரைவில் வெளிவர உள்ள 'பரத் அனி நேனு' படத்தின் விழா கடந்த சனிக்கிழமை அன்று நடந்தது.
அப்போது மேடையில் பிரகாஷ்ராஜ் பேச வந்த சிறிது நேரத்திலேயே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் 'ஃபாதர், ஃபாதர்' என கோஷங்களை எழுப்பினார்கள். எதற்காக இப்படி சத்தம் போடுகிறீர்கள், என்ன வேண்டும் என பிரகாஷ்ராஜ் கேட்டுவிட்டு தொடர்ந்து பேசினார். இருப்பினும் ரசிகர்கள் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார்கள். இதனால், கோபமடைந்த பிரகாஷ்ராஜ், விருட்டென மைக்கைக் கொடுத்துவிட்டு மேடையை விட்டு வெளியேறினார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்டுக் கொண்டும் அவர் போய்விட்டார்.
அதுவரை சிரித்துக் கொண்டிருந்த மகேஷ் பாபு, ஜுனியர் என்டிஆர் ஆகியோர் பிரகாஷ்ராஜின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்தனர். பிரகாஷ்ராஜ் இப்படி செய்ததற்கு மகேஷ்பாபு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.