'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜெய்-அஞ்சலி ஆகிய இருவரும் எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். அந்த படத்தில் காதலர்களாக நடித்த அவர்கள் பின்னர் நிஜத்திலும காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. பின்னர் அவர்கள் மீண்டும் பலூன் என்ற படத்தில் இணைந்து நடித்து வந்தபோது அவர்கள் திரு மணத்திற்கு தயாராகி விட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அதையடுத்து, நானும், ஜெய்யும் ஜெஸ்ட் பிரண்ட்ஸ் மட்டுமே. எங்களுக்கிடையே காதல் எதுவும் இல்லை என்று வருடக்கணக்கில் வெளியாகி வந்த காதல் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அஞ்சலி.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஏப்ரல் 6-ந்தேதி நடிகர் ஜெய் தனது 34வது பிறந்நாளை கொண்டாடியுள்ளார். இதையடுத்து ஜெய்க்கு தனது டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அஞ்சலி.