ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமா என்பது வேறு அரசியல் என்பது வேறு என்பது நடிகர்களாக இருந்து அரசியல்வாதிகளாக மாறிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் நன்றாகவே புரிந்திருக்கும். இருவரும் அரசியல் சார்ந்த கருத்துகளைப் பற்றிப் பேசும் போதும், பதிவிடும் போதும் அவற்றுக்கு எதிர்மறைக் கருத்துக்களைக் கொண்டவர்கள் அவர்களை விமர்சிப்பதைச் செய்து வருகிறார்கள்.
கமல்ஹாசன் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார். ஆனால், ரஜினிகாந்த் இதுநாள் வரையிலும் பட்டும், படாமலும் பேசி வந்தார். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மாநில அரசை எதிர்த்து அவர் கருத்து சொன்னதும் அவருக்கு அதிகமான எதிர்ப்புக் குரல்களும் எழுந்தது.
இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே வாரியம் அமைத்தே ஆக வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த விஷயத்தில் கர்நாடகாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் ஏற்கெனவே அவருக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்காதீர்கள் என வேண்டுகோள் வைத்துவிட்டார்கள். அதற்குப் பிறகு ரஜினிகாந்தும் காவிரி விவகாரம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. கமல்ஹாசன் மட்டுமே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதனால், இருவர் மீதும் கர்நாடகாவில் அதிருப்தி நிலவ ஆரம்பித்துள்ளது. அதனால், அவர்களின் படங்கள் கர்நாடகாவில் வெளிவருவதில் சிக்கல் ஆரம்பமாகிவிட்டது.
அங்கு கர்நாடக எதிர்ப்பையும், இங்கு மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி இருவரும் அரசியல் செய்துவிடலாம். ஆனால், அவர்களது படங்களை திரையிட்டுவிட முடியுமா ?, அதை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.