தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹாலிவுட்டின் திறமை மிக்க இயக்குனர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இந்தியா வந்துள்ளார். டிஜிட்டல் யுகத்தில் திரைப்படங்களின் முக்கியத்துவம் பற்றிய கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளார். அவருடன் விஷுவல் கலைஞரான டாசிடா டீன் என்பவரும் வந்திருக்கிறார். திரைப்பட பாரம்பரிய பவுண்டேஷன் என்ற அமைப்பின் அழைப்பின் பேரில் அவர் இந்தியாவிற்கு வந்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் அவரைச் சந்தித்து உரையாடினார். அந்த சந்திப்பு பற்றி “கிறிஸ்டோபர் நோனை சந்தித்தேன். 'டன்க்ரிக்' படத்தை டிஜிட்டல் முறையில் பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டேன். அதற்கு பதிலாக அவருக்கு 'ஹே ராம்' படத்தின் டிஜிட்டல் பிரதியைக் கொடுக்கிறேன். அவர் 'பாபநாசம்' படத்தைப் பார்த்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது,” என கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்று நடைபெறும் நிகழ்வில் பல ஹிந்திப் பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். அதற்காக வந்த ஷாரூக்கானும், நடிகர் கமல்ஹாசனும் அப்போது சந்தித்துக் கொண்டனர். கமல்ஹாசன், ஷாரூக்கான இருவரும் 'ஹேராம்' படத்தில் இணைந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.