'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பழம்பெரும் நடிகை ஜெயந்தி(73), உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருவர் உள்ளம், அன்னை இல்லம், படகோட்டி, கர்ணன், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள், பாமா விஜயம், நில் கவனி காதலி உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஜெயந்தி. அன்றைய எம்ஜிஆர்., சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், கன்னட மொழியிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் மட்டும் 500 படங்களில் நடித்துள்ளார்.
பெங்களூரில் வசித்து வரும் ஜெயந்திக்கு இன்று காலை திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆஸ்துமா நோய் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.