தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நீல நதி, யாக்கை ஆகிய சிறுகதை தொகுப்புகளையும், உப்பு நாய்கள், கானகன், கொமோரா ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார் லக்ஷ்மி சரவணகுமார். இவர், எழுதிய கானகன் நாவலுக்கு 2016ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுரஷ்கார் விருது வழங்கப்பட்டது.
இயக்குனர் வசந்தபாலனிடன் உதவி இயக்குனராக இருந்த லக்ஷ்மி சரவணகுமார், காவியத் தலைவன், அரவான் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியாக இருக்கும், 2.ஓ திரைப்படத்தில் மேக்கிங் ஆப் எந்திரன் 2.ஓவை எழுத்து வடிவில் எழுதியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான இந்தியன் -2 திரைப்படத்தில் வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் லக்ஷ்மி சரவணகுமார்.
இந்தத் திரைப்படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன், கபிலன் வரைமுத்து ஆகியோர்களும் வசனம் எழுதுகிறார்கள்.