டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆரி, ஆஸ்னா ஜவேரி, சித்தாரா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் நாகேஷ் திரையரங்கம். டிரான்ஸ்இண்டியா நிறுவனத்தின் சார்பில் ராஜேந்திரா எம்.ராஜன் தயாரித்துள்ளார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அகடம் படத்தை இயக்கிய இஷாக் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் தலைப்பை எதிர்த்து பழம்பெறும் காமெடி நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த் பாபு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது தந்தை நடத்திய தியேட்டரின் பேரில் எங்கள் குடும்பத்தின் அனுமதியின்றி படம் எடுத்திருக்கிறார்கள். அதற்கு நஷ்டஈடு தர வேண்டும், அதுவரை படத்தை தடை செய்ய வேண்டும் என்று தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதமன்றம், இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி நாகேஷ் திரையரங்கம் படத்தின், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் இந்த படம் நாகேஷையோ, நாகேஷ் தியேட்டரையோ குறிப்பிடவில்லை என்ற வாசகம் இடம்பெற வேண்டும். படத்தை திரையிடும்போதும் மேற்கண்ட வாசகத்தையும் திரையிட வேண்டும், இயக்குனரும், தயாரிப்பாளரும் இணைந்து 20 லட்சம் ரூபாய் வழக்கு டெபாசிட் கட்ட வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்தது. அதன்படி நீதிமன்றம் குறிப்பிட்ட வாசகங்களுடன் பத்திரிகை விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. படம் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.