'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை அமலாபால் சென்னை தி.நகரில் உள்ள நடன பயிற்சி மையத்தில் ஒத்திகை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த தொழில் அதிபர் ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அமலபால் துணிச்சலுடன் காவல் நிலையத்துக்கு நேரடியாக சென்று அவர் மீது புகார் கொடுத்தார். போலீசார் தொழில் அதிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அமலாபாலின் இந்த துணிச்சலான நடவடிக்கையை நடிகர் சங்கம் பாராட்டி உள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சமீபத்தில் பிரபல நடிகை அமலாபால் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் காவல்துறையிடம் புகாரும்அளித்தார். இதனை தொடர்ந்து சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் நேரடியாக விசாரித்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.
காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு, பல நடிகைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றி வெளியில் சொல்ல பயந்தாலும் நடிகை அமலாபால் தைரியமாக புகார் செய்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.