பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
முகவரி துரை நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் ஏமாலி. இதில் சாம் ஜோன்ஸ் என்ற புதுமுகம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி, ரோஷினி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். படத்தில் சாம் ஜோன்ஸ் 4 கேரக்டர்களில் நடிக்கிறார். சமுத்திரகனி, சிங்கம்புலி, பாலசரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். சாம் டி.ராஜ் இசை அமைக்கிறார், ரத்தீஷ் கண்ணன், பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். படம் வருகிற பிப்ரவரி 2ந் தேதி ஒளிபரப்பாகிறது.
படத்தை பற்றி வி.இசட் துரை கூறியதாவது: இன்றைய இளம் தலைமுறையினர் காதலையும், காமத்தையும் எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் கதை. அதற்காக இது ஆபாச படம் இல்லை. பக்குவமாக சொல்கிற கதை. புதுமையாகவும் சொல்கிற கதை. படத்தில் 4 தனித்தனி கதைகள். நான்கு கதையும் ஒரு இடத்தில் இணையும். இந்த 4 கதையிலும் சமுத்திரகனியும், புதுமுக நடிகர் சாம் ஜோன்சும் இருப்பார்கள். இருவருக்குமே 4 வெவ்வெறு கேரக்டர்கள்.
சமுத்திகனி என்றால் விரைப்பாக அறிவுரை சொல்லும் பாத்திரங்களில் தான் நடிப்பார் என்ற இமேஜை இந்தப் படம் மாற்றும். அதேபோல முதல் படத்திலேயே நான்கு கேரக்டர் என்றாலும் அதை தாங்கி நடித்திருக்கிறார் சாம் ஜோன்ஸ். முதல் படத்திலேயே பெரிய சுமை அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அதை அவர் நன்றாக சுமக்கவும் செய்திருக்கிறார் என்கிறார் வி.இசட் துரை.