'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை கதையில் உருவாகி வரும் படம் மகாநதி. இப்படம், தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாக உள்ளது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் ஜெமினியாக துல்கர்சல்மான் நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், நானி, சமந்தா உள்பட பலரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்த கீர்த்தி சுரேஷ், அதன்பிறகு வேறு சில படங்களில் நடித்து வந்தவர், தற்போது மீண்டும் ஐதராபாத்தில் நடைபெறும் மகாநதி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அதோடு, இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு சாவித்ரி பற்றிய பல அரிய தகவல்களை அவருடன் பணியாற்றிய சீனியர் கலைஞர்களிடம் கேட்டறிந்து கொண்டாராம் கீர்த்தி சுரேஷ்.
அந்த வகையில், தான் நடித்த ஒரு பழைய படத்தின் படப்பிடிப்பின்போது அந்த செட்டில் பணியாற்றிய அனைவருக்கும் சாவித்ரி தங்க நாணயம் பரிசளித்ததை அறிந்த கீர்த்தி சுரேசும், சமீபத்தில் மகாநதி படப்பிடிப்பு குழுவுக்கு தங்க நாணயம் பரிசளித்துள்ளார்.