Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கரம் கோர்த்திடுங்கள், களத்தில் சந்திப்போம் - கமலின் அரசியல் அறிவிப்பு

17 ஜன, 2018 - 10:00 IST
எழுத்தின் அளவு:
Kamals-Political-entry-in-detailed

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் கருத்துக்களை கூறி வந்தார். ஆளும் கட்சியை கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்தும், மேடைகளில் பேசியும், பத்திரிகைகளில் எழுதியும் வந்தார். அரசியல் கட்சி தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தார்.

அரசியல் கட்சி தொடங்க தன்னை தயார்படுத்தி வருவதாகவும், தொடங்க பயம் எதுவும் இல்லை என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 21ந் தேதி புதிய கட்சியை தொடங்கப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று இரவு கமல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என்னை வளர்த்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியை தாண்டி கடமைகள் நிறைய இருக்கின்றன. அந்த கடமைகளின் தொடக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் அரசியல் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து பிப்ரவரி 21-ந் தேதி தொடங்க இருக்கிறேன். அன்று கட்சி பெயரை அறிவிக்கிறேன். ஆரம்பகட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளேன். இது நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்த சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சி கழகமோ அல்ல. என் புரிதல், எனக்கான கல்வி.

இது என் நாடு. இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழி நடத்த மாத்திரமன்று. பின் பற்றவே தலைவன் இருக்க வேண்டும். பின்தொடர்வதற்கே ஒரு தலைமை பொறுப்பு இருக்க வேண்டும். நாமெல்லாம் சேர்ந்து இந்த தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களை சந்திக்கத்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்.

இது ஆட்சியை பிடிப்பதற்கான திட்டமா? என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு குடியின் அரசு. அப்படி என்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதை நோக்கிய பயணம் இது. உங்களின் ஆதரவோடு இந்த பயணத்தை தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in