விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
பிரபல மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாந்த் இயக்கி வரும் தமிழ் படம் "கேணி". தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அர்ச்சனா, அனுஹாசன் என 5 மாஜி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பார்த்திபன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள். எம்.ஜெயச்சந்திரன் இசை அமைக்கிறார், படம் பற்றி இயக்குனர் எம்.ஏ.நிஷாந்த் கூறியதாவது:
மம்முட்டி, பிருத்விராஜ், சுரேஷ் கோபி நடித்துள்ள 7 மலையாளப் படங்களை இயக்கி உள்ளேன். கேணி தமிழ், மலையாள மொழிகளில் தயாராகி வருகிறது. நான் இயக்கும் படங்கள் சமூக பிரச்சினைகளை மையமாக கொண்டு இருக்கும். இந்தப் படமும் அப்படித்தான். காற்றைப்போல நீரும் மக்களுக்கு பொதுவானது. அதை உரிமை கொண்டாடவும், அணைகள் கட்டி தடுக்கவும் யாருக்கும் உரிமை இல்லை. இதை துணிச்சலாக படத்தில் பேசியிருக்கிறேன். தமிழ்நாடு, கேரளா மாநில எல்லை கிராமங்கள் தான் கதை களம். என்றார் நிஷாந்த்.