'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அரசியல் படம் தானா சேர்ந்த கூட்டம். பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கும் சூர்யா, அதன்பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார்.
மேலும், தானா சேர்ந்த கூட்டம் படத்தைப்பற்றி சூர்யா கூறுகையில், இந்த படம் அனைவரையும் இம்ப்ரஸ் பண்ணும். அந்த அளவுக்கு நாட்டில் பற்றி எரியும் சில அதிரடியான விசயங்களை இந்த படத்தின் கதையில் வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்காக முதன்முறையாக தெலுங்கில் பேசியது நல்ல அனுபவம். தெலுங்கு ரசிகர்களையும், தெலுங்கு மொழியையும் நான் நேசிக்கிறேன்.
மேலும், இந்த படத்தில் சீனியர் கலைஞர்களான செந்தில், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்கிறார் சூர்யா.