வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் மற்றும் பலர் நடித்த 'பலூன்' திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. வழக்கமான பேய்ப் படமாக இருந்தாலும் யோகி பாபுவின் நகைச்சுவை படத்தை முதல் பாதி வரை கலகலப்பாக ரசிக்க வைத்தது. படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்து ஆவரேஜாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும் படத்தின் இயக்குனரான சினிஷ், படத்தின் வெற்றி தனக்கு தனிப்பட்ட முறையில் வரவேற்பு தரவில்லை, அதற்குக் காரணம் படத்தின் பட்ஜெட்டை ஏற்றிவிட்ட சிலர் என குற்றம் சாட்டியிருக்கிறார். அது பற்றி அவருடைய டுவிட்டர் பதிவில் வெளிப்படையாக அவர் பதிவிட்டிருப்பதாவது,
''பலூன்' படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நானும் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளேன். ஆனால், தனிப்பட்ட முறையில் அதைக் கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை.
சிலரின் உள்ளீடு படத்தினைப் பாதித்துவிட்டது. திரையுலகத்தில் தொழில் ரீதியாக செயல்படத் தெரியாத சிலரால் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. படத்தின் பட்ஜெட் அவர்களால் உயர்த்தப்பட்டதால் தயாரிப்பாளருக்கு தேவையில்லாத நஷ்டம் உருவானது.
ஒரு தயாரிப்பில் நஷ்டம் வருவதை யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள். அது இயக்குனராக, ஹீரோவாக, ஹீரோயினாக மற்ற நடிகர்களாக, தொழில்நுட்பக் கலைஞர்களாக அல்லது வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களால் யாராக இருந்தாலும், அவர்கள் அந்த நஷ்டத்தை சந்திக்க வேண்டியவர்களாக ஆகிறார்கள்.
கடுமையாக உழைப்பவர்களால் மட்டும்தான் இங்கு முதலீடு செய்ய முடியும். 'அமாவாசை' சத்யராஜ் போல இந்தத் தொழிலுக்கு வருபவர்கள், பின் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது தாங்க முடியாது.
சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் அவருடைய நஷ்டத்தைப் பற்றி புலம்பினார். ஆனால், மற்றவர்கள் அதற்காக ஒன்றும் செய்யவில்லை. அது போன்ற கடுமையான நிகழ்வு மீண்டும் நடப்பதை நான் விரும்பவில்லை.
நேர்மையாக இருக்க வேண்டும் என்ற என் தைரியத்தை நான் மதிக்கிறேன். இந்த அறிக்கை என்னுடைய திரையுலக வாழ்க்கையைப் பாதிக்கும் என்றால், அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன். ஏனென்றால் ஒரு முதலீட்டாளராக பணத்தை இழப்பதன் வலி என்ன என்பது எனக்குத் தெரியும்.
அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது, தேவைப்படும் போது அதை நான் வெளியிடுவேன். எனவே, இந்தப் படத்தின் தாமதத்திற்காகவும், நஷ்டத்திற்காகவும் காரணமானவர்கள் அவர்களாகவே முன் வந்து தயாரிப்பாளருக்கு அந்த நஷ்டத்தைச் சரி செய்ய வேண்டும். அதற்கு முன்பாகவே நன்றி சொல்கிறேன்,” என இயக்குனர் சினிஷ் அவருடைய பதிவில் தெரிவித்துள்ளார்.