மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

டி.ராஜேந்தருக்கு வேலூரில் இரண்டு தியேட்டர்கள் உள்ளது. தற்போது வேலூரில் கால்நடை மருத்துமனை அருகே உள்ள ரயில்வே கேட்டால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. இந்த மேம்பாலம் டி.ராஜேந்தரின் தியேட்டர் வழியாக செல்கிறது. இதற்காக அவர் நிலத்தில் இருந்து 527 சதுரமீட்டர் நிலம் அரசுக்கு தேவைப்பட்டது. இதற்கான நோட்டீஸ் டி.ராஜேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று வேலூர் சென்ற டி.ராஜேந்தர் பத்திரபதிவு அலுவலத்திற்கு சென்று தனது 527 சதுர மீட்டர் நிலத்தை பொதுமக்கள் நலனுக்காக மேம்பாலம் கட்ட வழங்கினார். இதற்காக அரசு அவருக்கு 8 கோடியே 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்குகிறது.




