Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'விடுதலை' படத்தில் 'சோளகர் தொட்டி' நாவலின் தாக்கம் ?

08 ஏப், 2023 - 11:32 IST
எழுத்தின் அளவு:
Viduthalai-movie-faces-copy-issue-of-Solagar-thotti-novel

தமிழ் சினிமாவில், கதைத் திருட்டு, கதைத் தழுவல், காட்சிகள் திருட்டு, கதாபாத்திரங்களின் தாக்கம், இன்ஸ்பிரேஷன் என பல வடிவங்களில் 'காப்பி' என்பது நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் சசிகுமார் நடித்த 'அயோத்தி' படத்திற்கும் இது போன்றதொரு சர்ச்சை எழுந்தது. அந்தப் படத்தின் கதையை எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் எழுதியதாக சொல்லப்பட்ட நிலையில், அந்தக் கதைக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடினர்.

அந்த சர்ச்சை அரைகுறையாக முடிந்த நிலையில் அடுத்த சர்ச்சையாக 'விடுதலை' படத்தின் சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. அப்படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள், சில காட்சிகள் ஆகியவை தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்த பல நிஜ சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். வெவ்வேறு கால கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை சினிமா புனைவுக்காக ஒரே காலத்தில் நடந்ததாக திரித்து வெற்றிமாறன் சொல்லியிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர்தொட்டி' நாவலின் பல காட்சிகள் இந்தப் படத்தில் இருப்பதாக ஒரு சர்ச்சை எழுந்தது. அது குறித்து அந்நாவலை எழுதிய பாலமுருகன் சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளார்.



“வெற்றி மாறனின் விடுதலை திரைப்படத்தின் முன் வெளியீட்டு காட்சிகள் கடந்த மாதம் வந்த போது நண்பர் ஒருவர் வனம் சார்ந்த பின்னனி மற்றும் ஒரு காவலர் பார்வையில் கதை நகர்தல் என அறிந்து, சோளகர் தொட்டி நாவலின் காட்சிகள் இருக்குமோ? என அய்யம் தெரிவித்தார். ஆனால் நான் வெற்றி மாறன் என்ற இயக்குனரை நேரில் அறிந்ததில்லை என்ற போதும், தொடர்ந்து நாவல்களின் மைய கதையை திரைப்படமாக்கும் இயக்குனராகவும், இலக்கியத்தின் மீது ஆர்வம் உள்ளவராகவும் இருப்பதாலும், மேலும் அந்த திரைப்படமானது எழுத்தாளர் ஜெய மோகனின் கதையை அடிப்படையாக கொண்டது என இருந்ததாலும் சில கடந்து போகும் காட்சிகளை தவிர்த்து சோளகர் தொட்டி தாக்கம் இருக்காது என உறுதியாக கருதினேன்.

திரைப்படம் வெளிவந்த தினத்திலிருந்து பல்வேறு நண்பர்கள் சோளகர் தொட்டி நாவலின் பல காட்சிகள் இப் படத்தில் உள்ளதாக குறிப்பிட்டனர்.

நான் திரைப்படத்தை நேற்று பார்த்தேன். திரைப்படமானது பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பான ஒரு வெற்றி படத்திற்கான அனுபவத்தோடு சில அரசியல் விடயங்களையும், சில குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்வதாகவும் செல்கின்றது. திரைப்படத்தின் மையக் கருவும் , கதைக்களமும், பாத்திரங்களும் சோளகர் தொட்டியின் பின் புல நீட்சியாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பாத்திரங்களாகவும் நாவலை வாசித்த பலருக்கும் வருவது போன்ற எண்ணம் எனக்கும் எழுந்தது.

குறிப்பாக இத்திரைப்படத்தின் துவக்க காட்சியான இரயில் வெடிப்பும், இறுதி காட்சியான பெருமாள் என்ற மனிதரை பிடிக்கும் காட்சியையும் எடுத்து விட்டால் கதையின் களம் மலைப் பகுதி, பழங்குடி கிராமம் மேலும் அது தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெறும் பகுதி. காவல்துறையின் விசாரனை முகாமான “ஒர்க் ஷாப்” வதை முகாம் . அங்கு பணி புரியும் ஒரு காவல்துறையில் மனித நேயம் உள்ள ஒரு காவலர். சோளகர் தொட்டி நாவலில் இந்த காவலருக்கு பெயர் சுபாஷ். கையறு நிலையில் மனித நேயத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் குணம் கொண்ட மனிதன். அது மட்டுமல்ல மல்லி என்ற இளம் பெண்ணை முகாமிலிருந்து மீட்டு உயிருடன் ஜீப்பில் கொண்டு போய் அவள் வீட்டில் சேர்க்கும் மனிதன். வதைகளுடன் மக்கள் வாடும் போது ஏதோ ஒரு வகையில் ஆறுதலாய் நிற்கும் ஒரு போலீஸ்காரன். இந்த பாத்திரத்தின் நீட்சி மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட வடிவமாக இத் திரைப்படத்தின் நாயகன் நிற்கின்றான்.



திரைப்படத்தின் வதை முகாம் காட்சிகள் கை நகங்களை வெட்டுதலில் தொடங்கி ஒரு பெண்ணிடம் அவளின் மாமனாரின் இருப்பிடம் கேட்டு துன்புறுத்துதல், அப் பெண்ணின் குழந்தையை கொன்று விடுதல், வதை முகாமின் வதைகள் என சோளகர் தொட்டியின் உள்ளடகத்திலிருந்து கையாளப்பட்டுள்ளதாக கருத முடிகின்றது. வீரப்பனுக்கு பதிலாக வாத்தியார் என்ற பாத்திரங்களை கூறினாலும் கதையின் களம் சோளகர் தொட்டியின் தாக்கத்தில் இருக்கின்றன. சோளகர் தொட்டி என்ற நாவலின் காட்சிகள் இப்படத்தில் பயன்படுத்த படுத்தியதாலும் நாவலின் ஆன்மா வேறானது. அது நியாயத்தின் குரலாகவும், மனிதநேயத்தின் நியதிகளை கோரிய படைப்பாகவும் இருக்கின்றது. அது ஒரு தொடர் செயல்பாட்டின் வெளிப்பாடு. வெகு காலம் அம் மக்களுடன் பயணித்த அனுபவத்தின் படைப்பு வடிவாக்கம்.

ஆனால் வெற்றி மாறன் போன்ற இயக்குனர்கள் பல இளம் தலை முறை படைப்பாளருக்கு முன்னுதாரணமாக இருப்பவர் அவர் ஒரு படைப்பை அணுகும் போது அறிவு நானயத்தோடு அணுகி இருக்க வேண்டும். ஒரு உண்மையை திரித்து கூறுவது, நிகழ்வுகளை தவறான வரலாற்றுடன் இணைப்பது, மற்றவரின் படைப்பை சில மாற்றங்கள் செய்து தனது படைப்பாக காட்டுவது என படைப்பு அறம் சார்ந்த நேர்மையை அவர் இழந்திருக்க வேண்டியதில்லை. மேலும் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட பழங்குடி மற்று இதர மலையோர கிராம மக்களின் குரலை வெளிப்படைதன்மையோடு உலகளாவிய அளவில் மனித நேயத்துடன் கொண்டு சென்றிருக்க முடியும். வன்முறைகள் மட்டும் காட்சிப்படுத்தப்பட்ட இடத்தில் பழங்குடி வாழ்க்கையும், நேயமும் அழிக்கப்பட்ட அம்மக்களின் வாழ்வையும் கூடுதலாக பேசியிருக்க முடியும். படைப்பு சார்ந்த அறம் வீழ்ச்சி அடைந்திருக்காது,” என்று பதிவிட்டுள்ளார்.

'விடுதலை' படத்தின் காட்சித் திருட்டுகள் பற்றி பெரிதும் குற்றம் சொல்லாமல் அதை பெருந்தன்மையுடன் பாலமுருகன் கடந்து செல்வதாக பலரும் அந்தப் பதிவில் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'வாத்தி' மொத்த வசூல் : தெலுங்கிலும் ஜெயித்த தனுஷ்'வாத்தி' மொத்த வசூல் : தெலுங்கிலும் ... 'விதி மீறல் கட்டிடங்கள்' : எழுத்தாளர் ராஜேஷ்  குமார் வருத்தம் 'விதி மீறல் கட்டிடங்கள்' : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Paraman - Madras,யூ.எஸ்.ஏ
09 ஏப், 2023 - 13:17 Report Abuse
Paraman தோல்வி மாறன் என்ற ஒரு க்ரிப்டோ, அர்பன் நக்ஸல் தாக்கத்தில் தன்னை பெரிய இடது சாரி பருப்பு என்று தானே நினைத்து கொண்டு இருக்கும் ஒரு அரைவேக்காடு இவர் படங்களில் உரிமை மறுக்கப்பட்டவர்ளுக்கு குரல் கொடுப்பதாகவும் , ஒடுக்கப்பட்டவர்களுக்கு போராடுவதாகவும் திரைக்கதை எல்லாம் அமைத்து ஊருக்கு உபதேசம் செய்வார். ஆனால் 40.லட்சத்திற்கு முதலாளித்துவ நாடுகளின் ஆடம்பர கார்கள் , மோட்டார் பைக் வாங்கி பந்தா காட்டுவார்...இவரின் அணைத்து படைப்புகளும் உள்நாட்டு, வெளிநாட்டு இலக்கியங்கள், புதினங்கள் தழுவல்களே இவனுக்கும் அட்லீ போன்ற வெத்து வெட்டு க்ரிப்டோகளுக்கும் இருக்கும் சிறிய வித்தியாசம் என்ன வென்றால் இவன் புத்தகங்களும் படித்து காப்பியடிக்கும் திறமை உள்ளவன்....இவர்கள் குருநாதர் பாலுமஹேந்திராவும் அப்பிடியே இந்த கும்பல் தமிழக சினிமாவின் சீரழிவு....
Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
09 ஏப், 2023 - 09:10 Report Abuse
Siva சுஜாதா எழுதாத கதையா... கதை களமா... அவர் இருக்கும் வரை யாரையும் குற்றம் சொன்னதில்லை... இவர்கள் இலவச விளம்பர விரும்பிகள்...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09 ஏப், 2023 - 06:42 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அதுக்கு என்ன இப்ப?
Rate this:
Rajamani Shanmugavelu - Male,மாலத்தீவு
08 ஏப், 2023 - 13:17 Report Abuse
Rajamani Shanmugavelu சொன்னது ஒன்னும் புரியல...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in