பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டது. இந்த நிலைகளில் அடுத்தபடியாக ரஜினியிடம் சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ், ‛ஜெய்பீம்' ஞானவேல் உள்ளிட்ட பலர் கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான கதையை ரஜினி தேர்வு செய்துவிட்டாராம். அதாவது ‛ஜெய் பீம்' படத்தை இயக்கிய ஞானவேல் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாகவும், அடுத்தபடியாக அவர் இயக்கத்தில் ரஜினி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.