டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வந்தபோது சில பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் இந்த படத்தை கிடப்பில் போட்டது லைகா நிறுவனம். இதன் காரணமாக ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கத் தயாரானார் ஷங்கர். இதையடுத்து அவருக்கும் லைகா நிறுவனத்திற்க்குமிடையே பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்ற வரை சென்றது. அதில் ஷங்கருக்கு சாதகமான தீர்ப்பு வரவே ராம்சரண் நடிக்கும் 15 ஆவது படத்தை இயக்கி வந்தார். அந்த படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது ஷங்கருக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையிலான பிரச்சினை சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டதை அடுத்து இந்தியன்- 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
இதன் காரணமாக தற்போது இந்தியன்-2, ராம்சரண் -15 ஆகிய இரண்டு படங்களையும் மாறி மாறி இயக்கி வருகிறார் ஷங்கர். இதனால் வேகமாக நடைபெற்று வந்த ஆர்சி -15 படப்பிடிப்பு தற்போது தாமதமாகி வருகிறது. அதோடு ஆர் சி 15 படத்தில் விஷுவல் எபக்ட்ஸ் மற்றும் எடிட்டிங் செய்முறை பல மாதங்கள் நீடிக்க என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் முடிவதற்கு அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் என்பதால் தற்போது அப்படத்தை 2024 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு முடிவு செய்திருப்பதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர் சி -15 படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானியும், ஒரு முக்கிய வேடத்தில் அஞ்சலியும் நடித்து வருகிறார்.