தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள திரையுலகில் பிரேமம், நேரம் என்கிற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். சமீபத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் இவரது இயக்கத்தில் கோல்ட் திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் கேரளாவில் நர்ஸ் ஒருவர் ஹோட்டலிலிருந்து வரவழைத்த கெட்டுப்போன இறைச்சி உணவை சாப்பிட்டு உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள அல்போன்ஸ் புத்ரன், தானும் இதுபோன்ற ஒரு நிலைக்கு ஆளானதாகவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “15 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் நடிகர் ஷராபுதீன் (பிரேமம் படத்தில் அறிமுகமானவர்) எனக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக எனக்கு சவர்மா வாங்கிக் கொடுத்தார். அதை சாப்பிட்ட பின்னர் மறுநாள் காலையிலேயே நான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்தேன். அதிலிருந்து நான் குணமடைந்து மீண்டு வருவதற்கு கிட்டத்தட்ட 70,000 ரூபாய் வரை மருத்துவ செலவு ஆனது. காரணம் கெட்டுப்போன அந்த உணவு புட் பாய்சன் ஆக மாறியதுதான்.
ஒருகட்டத்தில் எனக்கு ட்ரீட் கொடுத்த ஷராபுதீன் மேல் கூட கோபம் வந்தது. ஆனால் உண்மையான கோபம் யார் மீது வர வேண்டும் ? அந்த 70 ஆயிரம் ரூபாய்க்காக என் பெற்றோர் பல பேரிடம் கெஞ்சிக் கூத்தாடி வாங்கி செலவு செய்து என்னை காப்பாற்றினர். மீடியாக்கள் கேள்வி எழுப்ப வேண்டியது இது போன்ற விஷயங்களில் தான்: என்று கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்