‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் தெறி. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாகவும், அந்தப் படத்தை ஹரிஷ் சங்கர் என்பவர் இயக்க இருப்பதாகவும் டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பவன் கல்யாணின் தீவிரமான ரசிகை ஒருவர், தெறி ரீமேக்கை இயக்கவிருக்கும் ஹரிஷ் சங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தெறி படத்தின் ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்க கூடாது . அப்படி நடித்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஒரு மிரட்டல் செய்தி வெளியிட்டுள்ளார். அதோடு, பவன் கல்யாண் ரீமேக் அல்லாமல் நேரடி படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார். அதையடுத்து பவன் கல்யாண் ரசிகர்கள் #WeDontWantTheriRemake என்ற ஒரு ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்தனர். இப்படி தனது பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் இருந்து தெறி ரீமேக்கில் தான் நடிப்பதற்கு எதிர்ப்பு வலுத்திருப்பதால், இந்த படத்தில் நடிப்பதா? வேண்டாமா? என பவன் கல்யாண் ஆலோசித்து வருவதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.