ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு ஹீரோவாக என்ட்ரி ஆகி உள்ள படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் ஷிவானி நாராயணன், சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். வருகிற 9ம் தேதி படம் வெளிவருவதை தொடர்ந்து படக்குழுவினருடன் இணைந்து வடிவேலு புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நடந்த கலந்துரையாடல் ஒன்றில் வடிவேலு கூறியிருப்பதாவது: என்னிடம் வந்து கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதை பிடிக்கவில்லை என்றால் கால்ஷீட் கொடுக்க மாட்டேன். அப்படி நான் கால்ஷீட் கொடுக்காதவர்கள் தான் என்னப்பற்றி தவறாக பேசுகிறார்கள். வடிவேலு ரொம்ப திமிரு பிடித்தவன், என்ன ஆட்டம் போடுகிறான் என்றெல்லாம் புரளியை கிளப்பிவிடுகிறார்கள்.
என்னோட படத்தை, காமெடியை மக்கள் ரசிக்கனும், அதற்காக நான் ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அது பிடிக்காதவர்கள் பொறாமையில் இதுபோன்று பேசுகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்னை ரசிக்கிறார்கள் அதுபோதும் எனக்கு. என்று கூறியுள்ளார்.