பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமிழ் சினிமா இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோருடன் இணைய தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளர்கள்தான் தயாரித்தனர். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. ஆனாலும், தமிழிலும் தடம் பதிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.
விஜய் நடிக்கும் 'வாரிசு', தனுஷ் நடிக்கும் 'வாத்தி' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்தவர்கள்தான். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உருவாகும் 'ஆர்சி 15', வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்து வரும் 'கஸ்டடி' ஆகிய படங்களையும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்தான் தயாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியான 'லவ் டுடே' படத்திற்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்றே நாளில் 7 கோடி வரை வசூலித்து படம் லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பிரதீப்பை இயக்குனராக வைத்து தமிழ், தெலுங்கில் படங்களைத் தயாரிக்க சில தெலுங்கு தயாரிப்பாளர்கள் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துவிட்டார்களாம்.