Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குழந்தை பெற்ற விவகாரம் : நயன்தாராவிடம் விசாரணை?

17 அக், 2022 - 10:25 IST
எழுத்தின் அளவு:
Baby-issue-:-Health-team-to-enquire-Nayanthara-and-Vignesh-Shivan

சென்னை : வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக, நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளிடம் நேரில் விசாரிக்க, அரசு அமைத்த குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர், சென்னையில் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நான்கு மாதங்களே ஆகும் நிலையில், 'நானும், நயன்தாராவும் அம்மா, அப்பா ஆனோம்' என, சமூக வலைதள பதிவில், விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.

வாடகை தாய் வாயிலாக, நயன்தாரா குழந்தை பெற்றது தெரிய வந்தது. இதில், விதிமுறைகள் மீறப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. விசாரணை நடத்தப்படும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சுகாதாரத்துறை அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.



இந்நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர், ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக, 2021 டிசம்பரிலேயே ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக, கடந்த ஆண்டு டிசம்பரிலேயே ஒப்பந்தம் போட்டிருந்தால், மருத்துவமனை நிர்வாகம், அப்போதே முறைப்படி அரசுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். வாடகை தாய் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடந்து வருகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவனிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து பாராட்டிய கார்த்திரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து ... 'ஆர்ஆர்ஆர்' - ஆஸ்கர் விருது வாங்க ரூ.50 கோடி செலவு? 'ஆர்ஆர்ஆர்' - ஆஸ்கர் விருது வாங்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in