அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'பொன்னியின் செல்வன்'. படம் வெளியான நாளிலிருந்தே தினமும் படத்தைப் பார்க்க மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். காலாண்டு விடுமுறை நாட்கள், ஆயுத பூஜை விடுமுறை நாட்கள் என்பதால் தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை.
படம் வெளியான ஐந்து நாட்களில் இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த 'சர்க்கார், பிகில்' ஆகிய படங்கள் ஒரு வாரத்தில் அந்த சாதனையை நிகழ்த்தியிருந்தன. ஆனால், 'பொன்னியின் செல்வன்' படம் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடியைக் கடந்து தியேட்டர்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இந்திய அளவில் இப்படம் 170 கோடி வரை வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள். உலகம் முழுவதும் வசூல் கடந்த ஐந்து நாட்களில் ரூ.300 கோடியைக் கடந்திருக்கும் என்றும் இந்த வார இறுதிக்குள் ரூ.500 கோடியைக் கடக்கும் என்றும் மேலும் தெரிவிக்கிறார்கள்.