'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

'பொன்னியின் செல்வன்' படம் வந்த பிறகு அந்தப் படத்தில் உள்ள பல கதாபாத்திரங்களைப் பற்றியும், அதில் நடித்தவர்களைப் பற்றியும் பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக 'குந்தவை' கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்றதும் எதிர்க் குரல்கள் எழுந்து அவரா என அதிர்ச்சி கமெண்ட்களை அளித்தவர்கள் பலர். ஆனால், அந்த எதிர்க்குரல்களை, அதிர்ச்சிகளை இப்போது பாராட்டுக் குரல்களாகவும், ஆச்சரியக் கமெண்ட்டுகளாகவும் தனது நடிப்பால் மாற்றியுள்ளார் த்ரிஷா.
20 வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மாடலிங் துறையில் நுழைந்தவர் த்ரிஷா. டிவியில் தொகுப்பாளராகப் பணியாற்றி, ஒரு படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்து போனவர், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பது சாதாரண விஷயமல்ல.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல சூப்பர் ஹிட் படங்களிலும், பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தவர். ஒரு கட்டத்தில் தெலுங்கு சினிமாவை விட்டு விலகினார். தமிழிலும் சில படங்களில் மட்டுமே நடிப்பதைத் தொடர்ந்தார். 2018ல் வெளிவந்த '96' படம் அவரை 'ஜானு, ஜானு' என ரசிகர்களால் தூக்கிக் கொண்டாட வைத்தது. அதற்கு முன்பு அவர் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் 'ஜானு' கதாபாத்திரம் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரமாக அமைந்தது. இந்தப்படம் இன்றோடு வெளியாகி 4 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பிறகு இப்போது 'பொன்னியின் செல்வன்' படத்தின் குந்தவை கதாபாத்திரம் அமைந்துள்ளது. தமிழில் தொடர்ச்சியாகப் பேசத் தடுமாறுபவர் இப்படத்தில் சொந்தக் குரலில் அந்தக் காலத் தமிழையும் சரியாக உச்சரித்து பாராட்டப்படுகிறார். ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்தவுடன் கதாநாயகிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் தமிழ் சினிமா நாற்பது வயதைத் தொட்டுள்ள த்ரிஷாவுக்கு விதவிதமான கதாபாத்திரங்களைக் கொடுத்து இன்றும் இளவரசியாக அழகு பார்க்கிறது.




