ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 7ம் தேதி முதல் தென்காசியில் நடைபெற இருக்கிறது. 1930-40 காலக்கட்டத்தில் நடப்பது மாதிரியான கதைக்களத்தில் உருவாகிறது. இதற்காக நீண்ட தலைமுடி, தாடி என உலா வருகிறார் தனுஷ். இது தொடர்பான போட்டோ வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இருதினங்களுக்கு முன் மாநகரம் பட புகழ் சந்தீப் கிஷான் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது நாயகியாக பிரியங்கா அருள் மோகன் இணைந்துள்ளார். தமிழில் டாக்டர் படத்தில் அறிமுகமாகி எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களில் நடித்தார் பிரியங்கா. அடுத்து தனுஷ் உடன் நடிக்கிறார்.
இதுபற்றி பிரியங்கா கூறுகையில், ‛‛இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் தனுஷ் உடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. படப்பிடிப்பு துவங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்'' என்கிறார்.